"சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பிய விஞ்ஞானிகள் அரசு பள்ளியில் படித்தவர்கள்" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை செய்தது, அரசு பள்ளியில் படித்த விஞ்ஞானிகள் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பிய விஞ்ஞானிகள் அரசு பள்ளியில் படித்தவர்கள் - மயில்சாமி அண்ணாதுரை
x
சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை செய்தது, அரசு பள்ளியில் படித்த விஞ்ஞானிகள் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் முறையை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் சைக்கிள் பேரணி நடத்தினர். அதை தொடங்கி வைத்த அவர், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை, அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர் என்று குறிப்பிட்டார். அவர்கள்தான் சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பினர் என்றும் பெருமையாக கூறினார். அரசு பள்ளிகளில், தமிழில் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்