பரபரப்புடன் வெற்றி பெற்ற திருமாவளவன்...

சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றாலும், ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் வந்ததால் பரபரப்பு நீடித்தது.
x
சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றாலும், ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் வந்ததால் பரபரப்பு நீடித்தது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்  சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட்டார். வாக்கு எண்ணப்பட்டபோது, முதல் சுற்று முதல் முன்னிலையும், பின்னடைவும் என மாறிக் கொண்டே இருந்தது. இதனால் சிதம்பரம் தொகுதியின் மீது கவனம் திரும்பியது. மேலும் நள்ளிரவை கடந்தும் வாக்கு எண்ணிக்கை நீடித்ததால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. கடைசியில் நள்ளிரவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், பல மணி நேரம் நீடித்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.

Next Story

மேலும் செய்திகள்