"ஒரு நாள் அதிகாரத்துக்கு வருவோம்" - நாம் தமிழர் கட்சி 3.88 % வாக்குகளை பெற்று அழுத்தமான தடம்

ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் என பிரகடனம் செய்து தேர்தலை சந்தித்தது நாம் தமிழர் கட்சி. பண பலம், சமூக பின்னணி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதுடன், ஆண்களுக்கு இணையாக 50 சதவீதம் பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியது.
x
நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தனது தேர்தல் பிரசார கூட்டங்களில், மக்கள் மத்தியில் மன மாற்றத்தை உருவாக்க இந்த தேர்தலை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அவரது நம்பிக்கை பிரகாசமாக உள்ளதை கணிக்க முடிவதாக பலரும் கூறுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் 6-வது இடத்தில் இருந்த நாம் தமிழர் கட்சி, தற்போது பல தொகுதிகளில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட காளியம்மாள்,  60 ஆயிரத்து 575 வாக்குகளை பெற்றுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் 30 ஆயிரத்து 886 வாக்குகளை பெற்றுள்ளார். தென் சென்னை தொகுதியில் ஷெரீனுக்கு 50 ஆயிரத்து 222 வாக்குகள் கிடைத்துள்ளது.  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மகேந்திரனுக்கு 84 ஆயிரத்து 979 வாக்குகளும், திருவள்ளூர் தொகுதியில் வெற்றிச் செல்விக்கு, 65 ஆயிரத்து 416  வாக்குகளும் கிடைத்துள்ளது. திண்டுக்கல் தொகுதியில் கவனம் ஈர்த்த நடிகர் மன்சூர் அலிகான்  54 ஆயிரத்து 957  வாக்குகளைப் பெற்றுள்ளார். காஞ்சிபுரம் தொகுதியில் சிவரஞ்சனிக்கு 62 ஆயிரத்து 771 வாக்குகள் கிடைத்துள்ளது.  மதுரையில் போட்டியிட்ட பாண்டியம்மாளுக்கு 42 ஆயிரத்து 901 வாக்குகளும், கோவை தொகுதியில் போட்டியிட்ட எஸ்.கல்யாணசுந்தரத்துக்கு  60 ஆயிரத்து 519 வாக்குகளும் கிடைத்துள்ளது. நாகையில் போட்டியிட்ட மாலதி 51 ஆயிரத்து 448 வாக்குகள் பெற்றுள்ளார். சிவகங்கையில்,  சாந்தி பிரியாவுக்கு 72 ஆயிரத்து 240 வாக்குகளும், திருச்சியில் போட்டியிட்ட விநோத்துக்கு  65 ஆயிரத்து 286 வாக்குகளும் கிடைத்துள்ளது. விருதுநகர் தொகுதியில் அருள்மொழித் தேவனுக்கு  53 ஆயிரத்து 40 வாக்குகள் கிடைத்துள்ளது.  மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் நான்காவது இடத்தினை பதிவு செய்துள்ளதுடன், ஓட்டுமொத்தமாக 16 லட்சத்து 45 ஆயிரத்து 185  வாக்குகளை நாம் த​மிழர் கட்சி பெற்றுள்ளது. நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம் என பிரசார கூட்டங்களில் பேசிய சீமானின் பேச்சு, வேடிக்கை அல்ல என்பதை அக்கட்சி பெற்றுள்ள வாக்குகள் உறுதி செய்துள்ளன  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Next Story

மேலும் செய்திகள்