திருப்பூர் சாயப்பட்டறையில் தீ விபத்து - பொருட்கள் சேதம்

திருப்பூர் அருகே சாயப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
திருப்பூர் சாயப்பட்டறையில் தீ விபத்து - பொருட்கள் சேதம்
x
திருப்பூர் அருகே சாயப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. அருள்புரம் பகுதியில் இயங்கி வரும் சாயப்பட்டறையில், வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்கி இருக்கும் கட்டடத்தில் பிடித்த தீ மளமளவென மற்ற பகுதிக்கு பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 


Next Story

மேலும் செய்திகள்