நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது.
நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்
x
மேட்டூரிலிருந்து ஜூன் மாதத்தில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. 177 புள்ளி 25 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு முறையாக வழங்குவது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து, வரும் 28ஆம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. மசூத் உசைன் தலைமையில் கூடும் இந்தக் கூட்டத்திலும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் முன்வைக்கப்பட உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்