ராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி

சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி
x
சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் பானிப்பூரி கடை  நடத்தி வரும் பத்மநாபன் என்பவரின் மகன் பிரனவ், தந்தை கடையின் அருகே உள்ள ராட்டினத்தில் விளையாட ஏறியுள்ளான். அப்போது சிறுவனின் ஆடை எதிர்பாராத விதமாக ராட்டின கம்பியில் மாட்டி கொள்ள நிலைத்தடுமாறிய  பிரனவ் ராட்டினத்தில் அடிபட்டு கீழே விழுந்தான். இதில் பிரனவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அண்ணாசதுக்கம் போலீசார்,  ராட்டின உரிமையாளர் பிரகாசை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்