ரயில் தண்டவாளம் அருகே கிடந்த பச்சிளம் குழந்தை...

விழுப்புரம் மாவட்டம் ஆழியூர் அருகே, ரயில் தண்டவாளம் அருகில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
x
விழுப்புரம் மாவட்டம் ஆழியூர் அருகே, ரயில் தண்டவாளம் அருகில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பிறந்த சில மணி நேரமே ஆன நிலையில், குழந்தை தொப்புள் கொடியுடன் கழுத்தை நெறித்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முட்புதரில் கிடந்த குழந்தை அழும் சத்தம் கேட்ட கெளசல்யா என்ற பெண், குழந்தையை மீட்டு கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்றும் இந்த குழந்தையை தனக்கே தரும் படி கெளசல்யா கேட்டுள்ளார். மேலும், இன்னும் பலரும் அந்த குழந்தையை தத்தெடுக்க முன் வந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்