நாகை மாவட்டத்தில் வேதாந்தா ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு எதிராக தீர்மானம்

நாகை மாவட்டத்தில் வேதாந்தா ஒ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகை மாவட்டத்தில் வேதாந்தா ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு எதிராக தீர்மானம்
x
நாகை மாவட்டத்தில் வேதாந்தா, ஒ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செருதூரில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், வேதாரண்யம், ஆற்காட்டுத்துறை, புஷ்பவனம், விழுந்தமாவடி ஆகிய பகுதிகளின் விவசாய சங்கத்தினர் மற்றும் மீனவ கிராம தலைவர்கள் பங்கேற்றனர். கீழ்வேளூர், கீழையூர் மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிப்பதில்லை என்றும், விளை நிலங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஓ.என்.சி.ஜி., வேதாந்தா நிறுவனங்கள் குழாய் பதிக்க முற்பட்டால் போராடுவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மீனவர்கள் மற்றும் விவசாய சங்கங்களை ஒன்று திரட்டி நாகையில் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்