சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் குறித்து தலைமை செயலாளர், காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை

சமூக வலைதளங்கள் செயல்பாடுகள் குறித்து டி.ஜி.பி. மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்
சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் குறித்து தலைமை செயலாளர், காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை
x
சமூக வலைதளங்கள் செயல்பாடுகள் குறித்து டி.ஜி.பி. மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்  வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.சமூக வலைதளங்களால் ஏற்படும் குற்றங்கள், அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சைபர் கிரைம் துறைக்கு அரசு அறிக்கை அனுப்புவது வழக்கம். இதற்காக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன், சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர் சேட் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக ஆன்லைன் குற்றங்கள் உள்ளிட்டவை  குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்