டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தில் குப்பை இருந்ததால் அதிர்ச்சி

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வாங்கிய பீரில் குப்பைகள் இருந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தில் குப்பை இருந்ததால் அதிர்ச்சி
x
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் தங்கவேல். வழக்கம் போல் துப்பரவு பணியை முடித்துவிட்டு புலியகுளம் பங்கஜாமில் மில்ஸ் சாலையில் உள்ள டாஸ்மார்க் பாரில் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் வாங்கிய பீரில்  தோல் போன்ற குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடை ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் பாரில் இருந்த மது பிரியர்கள் அனைவரும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மளிகை கடை, ஹோட்டலில் சோதனை செய்யும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், டாஸ்மாக் கடையில் மதுபானம் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு நடத்துவதில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்