கடலூர் : தனியார் பள்ளியில் மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் கொள்ளை

கடலூர் அருகே தனியார் பள்ளியில் பூட்டை உடைத்து மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் 7 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கடலூர் : தனியார் பள்ளியில் மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் கொள்ளை
x
கடலூர் அருகே தனியார் பள்ளியில் பூட்டை உடைத்து மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் 7 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். டி.குமராபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளி ஊழியர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் தலைமை ஆசிரியர் அறையைத் திறந்தனர்.அப்போது தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பெட்டி திறந்து  பொருட்கள் சிதறி கிடந்தது. இதனை பார்த்த பள்ளி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து லாக்கரில் இருந்த 7 லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்ம நபர்கள் தொடர்பான தடயங்களை சேகரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்