மாமல்லபுரம் : ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடல்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு பதிவு மையம் மூடப்பட்டதால், கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
மாமல்லபுரம் : ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடல்
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு பதிவு மையம் மூடப்பட்டதால், கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர். மாமல்லபுரம் ரயில் டிக்கெட் முன்பதிவு மையத்தை போதிய வருவாய் ஈட்டவில்லை என்பதால், தெற்கு ரயில்வே நிர்வாகம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடியது. இதனால் தற்போது கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சென்னை, செங்கல்பட்டு டிக்கெட் முன்பதிவு மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ்களில் அதிக விலை கொடுத்து முன்பதிவு செய்யும் அவலம் ஏற்படுகிறது. எனவே, மையத்தை மீண்டும் திறக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்