குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

வேலூர் மாவட்டம் அருங்குன்றம் கிராமத்தில் 3 மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்
x
வேலூர் மாவட்டம் அருங்குன்றம் கிராமத்தில் 3 மாதமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக குடிநீர் விநியோகிக்காதது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த ரத்தினகிரி போலீசார் மற்றும் ஆற்காடு வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் விநியோகம் தொடர்பாக  உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் அளித்த உறுதியின்  பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்