அன்னிய தயாரிப்புகளை வணிகர்கள் புறக்கணிக்க வேண்டும் - வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பேட்டி

ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் அன்னிய தயாரிப்புகளை கடைகளில் விற்காமல் புறக்கணிக்க உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
x
விழுப்புரத்தில் நடைபெற்ற வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர்,  சில்லரை வணிகத்தை ஊக்கப்படுத்த, அன்னிய தயாரிப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது வணிகர்கள் ஒவ்வொருவரின் கடமை என்றும் அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்