சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்
x
கத்திரி வெயில் துவங்கி பத்து நாட்கள் ஆகிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக சென்னையில், பொதுமக்கள் சாலையோரங்களில் விற்கப்படும் இளநீர், கரும்பு , மோர் உள்ளிட்ட பானங்களை குடித்து தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்கின்றனர். இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக  தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட வடமேற்கு மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்