உற்சாக படகு சவாரி அனுபவம் தரும் ஆழியாறு அணை...
பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையில் படகு சவாரி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த அணை தமிழக சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி கேரளாவில் இருந்து நாளோன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்கு நாளொன்றுக்கு இரண்டு படகுகள் மட்டுமே இயக்கப்பட்டுகின்றன. இதில் பயணிக்க 3 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமாக 30ரூபாயும் , 10வயதுக்கு மேற்பட்டவர்களுக்க 40-ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவருகிறது இந்நிலையில், நவீன முறையிலான கூடுதல் படகுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சுற்றுலா பயணிகள், அங்குள்ள பூங்கா சரிவர பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story