உற்சாக படகு சவாரி அனுபவம் தரும் ஆழியாறு அணை...

பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணையில் படகு சவாரி மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
x
இந்த அணை தமிழக சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி கேரளாவில் இருந்து நாளோன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இங்கு நாளொன்றுக்கு இரண்டு படகுகள் மட்டுமே இயக்கப்பட்டுகின்றன. இதில் பயணிக்க 3 வயது முதல்  10 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமாக 30ரூபாயும் , 10வயதுக்கு மேற்பட்டவர்களுக்க 40-ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவருகிறது  இந்நிலையில், நவீன முறையிலான கூடுதல் படகுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சுற்றுலா பயணிகள், அங்குள்ள பூங்கா சரிவர பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்