நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு - பொதுமக்கள் அவதி
சென்னை திருவொற்றியூர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், குழந்தைகளும், முதியவர்களும் உறக்கமில்லாமல் மிகவும் அவதிப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உரிய பதில் இல்லை என்றும், துணை மின் நிலைய அலுவலகங்களில் இரவு நேரத்தில் ஊழியர்கள் இருப்பதில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். தமிழக அரசு உடனடியாக மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story