மீன் வரத்து குறைவு : மீன் பிரியர்கள் அவதி

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது.
மீன் வரத்து குறைவு : மீன் பிரியர்கள் அவதி
x
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. பழனியில் பாலாறு, குதிரையாறு, வரதமாநதி ஆகிய அணைகள் உள்ளன.  இவற்றில் பிடிக்கப்படும் மீன்கள் பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  இந்நிலையில்  அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், மீன்கள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் மீன்கள் விலை உயர்ந்துள்ளதால் மீன் பிரியர்கள் அவதி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்