மழை வேண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

மழை வேண்டி குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் மூலவருக்கும் உற்சவருக்கும் தினமும் சந்திர ஓரையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.
மழை வேண்டி  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
x
மழை வேண்டி குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் மூலவருக்கும் உற்சவருக்கும் தினமும் சந்திர ஓரையில்  சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. 11 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று, அம்மனுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆரம்பித்த மூன்றாவது நாளிலிருந்து குடியாத்தம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மழை வேண்டி மருதமலை கோயிலில் 1008 சங்கு பூஜை 



கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் மழை வேண்டி 1008 சங்கு பூஜை நடைபெற்றது. 1008 சங்குகளில் இருந்த  மருத தீர்த்தம் மூலம்  சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Next Story

மேலும் செய்திகள்