தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றம் - பழ.நெடுமாறன் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு, பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணு வெளியேற்றம் - பழ.நெடுமாறன் கண்டனம்
x
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு, பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 12 ஆண்டுகளாக வசித்து வந்த நல்லக்கண்ணு, காலி செய்யும்படி வந்த ஆணையின் பேரில், வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அவரது வயது மற்றும் தியாகத்தை எண்ணிப் பார்க்காமல், அரசு குடியிருப்பில் இருந்து அவரை வெளியேற்றி இருப்பதை கண்டிப்பதுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.மேலும், நல்லக்கண்ணுவிற்கு அரசு சார்பில் வீடு ஒன்றினை உடனடியாக வழங்க, முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும் பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்