நீண்ட வரிசையில் தண்ணீருக்கு தவமிருக்கும் பெண்கள் : முறையாக கொண்டுவரப்படாத தாமிரபரணி கூட்டுகுடிநீர்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் இரண்டு குடம் தண்ணீருக்கு காலிக்குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நீண்ட வரிசையில் தண்ணீருக்கு தவமிருக்கும் பெண்கள் : முறையாக கொண்டுவரப்படாத தாமிரபரணி கூட்டுகுடிநீர்
x
காவல்கிணறு ஊராட்சியில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகிய நீர்நிலைகள் வறண்டுவிட்டன.இந்நிலையில், தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் மட்டுமே கைகொடுத்து வருகிறது. காலிக் குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள், 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட  மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது, லாரிகள் மூலம் அவ்வப்போது வழங்கப்படுகிறது. எப்போது, தண்ணீர் வழங்கப்படும் என தெரியாததால், 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ஊராட்சி நிதியில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு மாதந்தோறும் பணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கும் காவல்கிணறு மக்கள், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்னர். முறையாக குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்