குடிபோதையில் 14 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிபோதையில், 14 வயது மகளை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.
குடிபோதையில் 14 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை
x
வையம்பட்டி அருகே உள்ள புதுமணியாரம்பட்டியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி, கடந்த 30ஆம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, உறங்கிக் கொண்டிருந்த தமது14 வயது மகளை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தாய் மற்றும் சகோதரனிடம் கூறி, அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தாய், சிறுமியுடன் சென்று மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், மகளை பலாத்காரம் செய்த கட்டடத் தொழிலாளியை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்