ஆசிரியர் பகவான் மீது இளம்பெண் பொய் புகார்?

ஆசிரியர் பகவான் மீது, இளம்பெண் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெள்ளிகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான்.... இவர் கடந்த ஆண்டு பணியிடம் மாற்றப்பட்ட நிலையில், அவரை பிரிய மனமில்லாமல் மாணவர்கள் கட்டி பிடித்து அழுத‌து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மாணவர்களின் அன்பை பெற்ற ஆசிரியர் பகவானை பணியிடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நாடுமுழுவதும் அவரது பெயர் பிரபலமடைந்த‌த‌து. சமீபத்தில்,  ஜூன் 18 ஆம் தேதி சென்னையை சேர்ந்த பெண் ஒருவருடன்   பகவானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இந்த நிலையில், ஆசிரியர் பகவான்  , திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருங்கி பழகிவிட்டு,  ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர்  புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர் பகவானையும், புகார் அளித்த பெண்ணையும் போலீசார் அழைத்து 5 மணி நேரம் விசாரித்துள்ளனர். அப்போது ஆசிரியர் பகவான், புகார் கொடுத்த பெண்ணை டி.என்.ஏ, பரிசோதனைக்கு அழைத்த‌தாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண், கால அவகாசம் கோரியதால், காவலர்கள் அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்து அனுப்பியுள்ளனர். இதனால், அந்த பெண் பொய் புகார் கொடுத்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்