மது அருந்தும் போது தகராறு - இளைஞர் குத்தி கொலை

மது அருந்தும்போது நண்பர்கள் இடையே நடந்த தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்தும் போது தகராறு - இளைஞர் குத்தி கொலை
x
ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் செந்தில்குமார் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு  ஏற்பட்டு உள்ளது. அப்போது, மஞ்சுநாதனை நண்பர் செந்தில்குமார் கத்தியால் வயிற்றில் குத்தி விட்டு தப்பியோடிவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார், அருகில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்