எண்ணெய் வாங்க சென்றவர் பள்ளத்தில் விழுந்து பலி
சென்னையில் எண்ணெய் கடையினுள் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து மதுசூதனன் என்ற ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தார்
அயனாவரத்தை சேர்ந்த அவர்,எண்ணெய் வாங்குவதற்காக அங்குள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார்.அங்கு எண்ணெய் சேமித்து வைப்பதற்காக தொட்டி கட்ட தோண்டிய பள்ளத்தில் மதுசூதனன் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இது தொடர்பாக எண்ணெய் கடை உரிமையாளர் கனகசபாபதியிடம் விசாரணை நடத்தியபோலீசார் அஜாக்கிரதையாக இருந்ததாக அவரை கைது செய்தனர்.
Next Story