மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் விவகாரம் : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு

லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளரான பழனிசாமியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் விவகாரம் : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு
x
லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளரான பழனிசாமியின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் கடந்த மாதம் 30ஆம் தேதி  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரது உதவியாளர் பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி, வெள்ளியங்காடு அருகே உள்ள ஒரு குட்டையில், பழனிசாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி பழனிசாமியின் மகன்  ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்