குடிநீர் வழங்கிட கோரி மக்கள் போராட்டம் : காலி குடங்களுடன் சாலை மறியல்

திருச்சியில் பல முறை புகார் அளித்தும் தண்ணீர் வழங்காத‌தால், மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கிட கோரி மக்கள் போராட்டம் : காலி குடங்களுடன் சாலை மறியல்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரவனூர் , சமுத்திரம் பகுதியில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீர், முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. பல முறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத‌தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சமுத்திரம் பகுதியில் அரசு பேருந்தை சிறை பிடித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கை குழந்தைகளுடனும், காலி குடங்களுடனும் மக்கள் நடத்திய போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். இந்த நிலையில், அங்குவந்த சிலர், போராட்டத்தை கைவிடுமாறு கூறியதால், அங்கு சிறிய வாக்குவாத‌ம் ஏற்பட்டது. இருதரப்பையும் சமாதானம் செய்த போலீசார், குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த‌தை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்