போதை வஸ்த்துக்களுடன் விருந்து நடத்திய விவகாரம் : அனுமதியின்றி மதுவிருந்து நடந்திய கேளிக்கை விடுதிக்கு சீல்

மாமல்லபுரம் அருகே அனுமதியின்றி மதுவிருந்து நடந்திய கேளிக்கை விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
போதை வஸ்த்துக்களுடன் விருந்து நடத்திய விவகாரம் : அனுமதியின்றி மதுவிருந்து நடந்திய கேளிக்கை விடுதிக்கு சீல்
x
மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் பட்டிபுலத்தில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் போதை வஸ்த்துகளுடன் விருந்து நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று இரவு திருவள்ளுர் மாவட்ட எஸ்.பி. பொன்னி தலைமையிலான போலீசாரின் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மதுபோதையில் இருந்த 7 பெண்கள் உள்பட 160 பேர் பிடிபட்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.இந்த நிலையில் லைசென்ஸ் இல்லாமல் சட்டவிரோத செயல்கள், போதை வஸ்த்துக்களுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தியதாக கூறி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேல் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு நுழைவு வாயில் கேட்டை மூடி சீல் வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்