சொகுசு விடுதியில் மது விருந்து கொண்டாட்டம் : 7 பெண்கள் உள்பட 160 பேர் கைது

மகாபலிபுரம் அருகே சட்ட விரோத மது மற்றும் போதை விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
x
பட்டிபுலம் சொகுசுவிடுதியில், மது மற்றும் போதை விருந்து நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளரும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்மான  பொன்னி தலைமையில், 100க்கும் மேற்பட்ட காவலர்கள், சொகுசு விடுதியை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், அதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 160 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு தினங்களுக்கு முன், பொள்ளாச்சி அருகே தனியார் தங்கும் விடுதியில் மது மற்றும் போதை விருந்தில் ஈடுபட்ட, கேரளாவை சேர்ந்த 159 மாணவர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்