பலாத்கார குற்றச்சாட்டால் இளைஞரை உதைக்கும் வீடியோ : வீடியோ இளைஞரை பிடிக்க தனிப்படை

பாலியல் குற்றச்சாட்டால், பொதுமக்கள் அடித்து உதைத்த இளைஞரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பலாத்கார குற்றச்சாட்டால் இளைஞரை உதைக்கும் வீடியோ : வீடியோ இளைஞரை பிடிக்க தனிப்படை
x
திருச்சி பகுதியில், செல்போன்களில் அண்மையில் பரவிய வீடியோ ஒன்றில், சிறுமிகள் முதல் பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடியதாக கூறி, ஒரு இளைஞரை அடித்து உதைக்கும் காட்சிகள் வெளியாகின.இது தொடர்பாக எந்த புகாரும் இல்லாததால், போலீசார் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், திருச்சி பாலக்கரை போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சி பீமநகர் பகுதியில் குடியிருந்த, புதுக்கோட்டை மாவட்டம்  மாத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என தெரியவந்தது. 50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து,   மணிவேலை பிடிக்க காவல் ஆய்வாளர் சுரேந்திரன் தலைமையில் தனிப்படையை அமைத்து திருச்சி  போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிவேல் பிடிபட்டதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்