இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் : கருப்பு பேட்ஜ் அணிந்து உறவினர்கள் போராட்டம்

டி.வல்லகுளம் கிராமத்தை சேர்ந்த மாயாண்டியின் மகள் ராதிகா,திருமணமான சில நாட்களிலேயே கணவரை பிரிந்து தன் தன் தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார்
இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் : கருப்பு பேட்ஜ் அணிந்து உறவினர்கள் போராட்டம்
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள டி.வல்லகுளம் கிராமத்தை சேர்ந்த மாயாண்டியின் மகள் ராதிகா, திருமணமான சில நாட்களிலேயே கணவரை பிரிந்து தன் தன் தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் போலீசார் பதிவு செய்த தற்கொலை வழக்குக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்

Next Story

மேலும் செய்திகள்