மதுரையில் பிரபல ரவுடி குத்திக் கொலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிரபல ரவுடி பிளேடு பாண்டி, மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பிரபல ரவுடி பிளேடு பாண்டி, மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி சடலமாக கிடந்ததை கண்ட மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 8 பேர் சேர்ந்து மது அருந்திய போது, ஏற்பட்ட தகராறில் பாண்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்களும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story