குடி போதையில் கார் விபத்து - 2 பேர் பலி : சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகே, தெருவில் சென்ற இருவர் மீது சொகுசு கார் ஒன்று அடுத்தடுத்து மோதியது.
x
சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகே, தெருவில் சென்ற இருவர் மீது சொகுசு கார் ஒன்று அடுத்தடுத்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி ஒருவர் பலியானார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் வாகனத்துடன் தப்ப முயன்ற போது, அவரைத் துரத்தி பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்