தாம்பரம் பகுதியில் இரவில் பட்டாகத்தியுடன் வலம் வரும் மர்மநபர்கள் : பொதுமக்கள் பீதி
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் நள்ளிரவில் மர்மநபர்கள் கத்தியுடன் வலம் வரும் சிசிடிவி காட்சி அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் நள்ளிரவில் மர்மநபர்கள் கத்தியுடன் வலம் வரும் சிசிடிவி காட்சி அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. ஜெருசலம் நகரில் வலம் வரும் இந்த பயங்கர மனிதர்கள், கிருஷ்ணா நகர், டிடிகே நகர் பகுதிகளில் நள்ளிரவில் கையில் கத்தியுடன் சுற்றி வருகின்றனர். ஜெருசலம் நகர் சர்வீஸ் சாலை பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை போயுள்ள நிலையில், நள்ளிரவில் கத்தியுடன் சுற்றுவது கொள்ளையர்களா? அல்லது யாரையும் குறிவைத்து சுற்றுகிறார்களா என்பது தெரியவில்லை. தனியாக இருக்கும் முதியோர், இல்லத்தரசிகள் என பலரையும் இது பதைபதைக்க வைத்துள்ளது. மர்மநபர்களை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story