ஊட்டி : கோடை விழாவை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழா தொடங்கி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழா தொடங்கி உள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சியில், வண்ணமிகு நடனங்கள் அரங்கேறின. குறிப்பாக பரதநாட்டியம், கரகாட்டம் போன்ற கிராமிய நடனங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. தொடர்ந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் வண்ண மீன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட அறிய வகை மீன்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர்.
Next Story

