உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் சுட்டுக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் மர்ம கும்பலால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் சுட்டுக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல்
x
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் மர்ம கும்பலால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் ஜருகு கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவர் தனது சகோதரி மகளுடன் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளார். மலைச்சாலை அடுத்துள்ள வனப்பகுதி அருகே வந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று,  முனுசாமியை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு இளம் பெண்ணை இழுத்து சென்றுள்ளது. அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி சாலையோரம் வந்து கூச்சலிட்டதால், அந்த கும்பல் தப்பியோடியது. இது குறித்து தகவல் அறிந்த, போலீசார், முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்