பேருந்து ஓட்டுநர்களை தாக்கிய இளைஞர்கள் - 2 பேரை கைது செய்தது போலீஸ்

சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்களை தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநர்களை தாக்கிய இளைஞர்கள் - 2 பேரை கைது செய்தது போலீஸ்
x
சென்னை, திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்வதற்கு இடையூறாக நின்ற ஆட்டோவை நகர்த்துமாறு ஓட்டுநர்கள் பிரபாகர் மற்றும் கோபிநாத் இருவரும் கூறியுள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்த இரண்டு இளைஞர்கள் ஓட்டுநர்களை கற்களால் தாக்கியுள்ளனர். அதில் தலையிலும் முகத்திலும் பலத்த காயம் ஏற்பட்ட ஓட்டுநர்கள், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார் அந்த பகுதியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்