நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை... வெளியானது திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.
x
தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் விஸ்வராஜ் என்பவர், ராசிபுரம் காவல்துறை காண்காணிப்பாளர் விஜயராகவனிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சேலம் அரசு மருத்துவமனையில் நாழிக்கல்பட்டீயை சேர்ந்த வடிவேல் அமுதா தம்பதிக்கு பிறந்த குழந்தை இலங்கை நாட்டை சேர்ந்தவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், தனக்கு கிடைத்த ஆதாரத்தை போலீசாரிடம் கொடுத்துள்ளதாகவும், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்