100 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அம்மன் சிலை

பூசாரியாக இருந்தவரின் வீட்டில் இருந்து சிலை மீட்பு
100 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அம்மன் சிலை
x
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான 2 அடி நீளமுள்ள அம்மன் சிலையை கண்டுபிடிக்குமாறு,கோயில் நிர்வாகம் சார்பில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார், அப்போது கோயிலில் பூசாரியாக பணியாற்றிய கந்தசாமியின் வீட்டு சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான அம்மன் சிலையை மீட்டனர். மீட்ட அம்மன் சிலையை கோயிலுக்கு கொண்டு வந்து பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மீட்கப்பட்ட சிலை தொடர்பாக சிலை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்