இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் - சாலையில் தவறி விழந்த பெண்

இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரில் நிலைதடுமாறி பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் - சாலையில் தவறி விழந்த பெண்
x
சென்னை மணலியை சேர்ந்த மகேந்திரன் தனது மனைவி ஜெகதீஸ்வரி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் கொரட்டூருக்கு சென்றுள்ளார்.மாதவரம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் அமர்ந்திருந்த ஜெகதீஸ்வரி வண்டியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னந்தலையில்  பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி ஜெகதீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்ற நிலையில் இட பற்றாக் குறையினால் தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்