வீட்டு வேலைக்கு அழைத்து சென்று 16 வயது சிறுமிபாலியல் பலாத்காரம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள மானாமதி கண்டிகையை சேர்ந்தவர், 16 வயது சிறுமி.
x
* ஈஸ்டர் பண்டிகைக்காக வீட்டிற்கு வந்த அந்த சிறுமி, மீண்டும் வீட்டு வேலைக்கு செல்லமாட்டேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். 

* இது குறித்து சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தன்னை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்த சிறுமி கண்ணீருடன் தெரிவிக்க அவரது பெற்றோர் அதிர்ந்து போனார்கள். 

* அவர்கள் இருவரும், தன்னை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கிராம மக்களுடன் சேர்ந்து சென்று, இந்த சம்பவம் தொடர்பாக  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

* இதையடுத்து காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமனி உத்தரவின்பேரில், பெரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வேளாங்கண்ணி, அற்புதராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

* வீட்டு வேலைக்கு என அழைத்து சென்று சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்