கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. கோவையில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வரும் ரசூல் பீட்டர், அவரது மகள் இவாஞ்சலின், தேவ் ஆனந்த் ஆகியோர் மீது 15க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், ஆனால் குறிப்பிட்டப்படி வேலை வாங்கி தராமல் பலரிடம் 40 லட்சம் ரூபாய்க்கும் மேலாக மோசடி செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story