"கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை மாற்ற வேண்டும்" - காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக, கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார்.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக, கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார். இதற்கான ஆதாரங்களை, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமனிடம் அளிக்க உள்ளதாக தந்தி டிவிக்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியர் மற்றும் எஸ்.பி. தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என்றும், அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
Next Story