காணாமல் போன ஐந்து வயது சிறுவன் - கண்டுபிடித்து தர கோரி பெற்றோர் கோரிக்கை
பழனியில் காணாமல் போன ஐந்து வயது சிறுவனை கண்டுபிடித்து தர கோரி, சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனியில் காணாமல் போன ஐந்து வயது சிறுவனை கண்டுபிடித்து தர கோரி, சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழனி ஆண்டவர் ஆண்கள் கலைக்கல்லூரி எதிரே சாலையோர குடிசையில், ஷாநவாஸ் மற்றும் சித்ரா தம்பதியினர், ஏழு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்களது ஆறாவது குழந்தை காணவில்லை என்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுவரை சிறுவன் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சென்னை காவல்துறைக்கும் சிறுவனின் பெற்றோர் மீண்டும் புகார் அளித்துள்ளனர்
Next Story