கோலாகலமாக நடைபெற்ற தர்மராஜா கோயில் தேர்த்திருவிழா
ஒசூர் டி.கொத்தப்பள்ளி தர்மராஜா கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக உலா வந்த தேரை ஆயிரக்காணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதனைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோட்டை சண்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவில் பூசாரி முறத்தாலும் துடைப்பத்தாலும் பக்தர்களை அடித்து ஆசி வழங்கினார். கோயில் பூசாரியிடம் அடிவாங்கினால் கஷ்டம் நீங்கி நன்மை நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
Next Story