ஆற்றில் குளித்த தொழிலாளியை இழுத்துச் சென்ற முதலை

சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் தனது மனைவியுடன் கொள்ளிடம் ஆற்றில் மேலகுண்டலபாடி கிராமத்தில் குளித்துள்ளார்.
ஆற்றில் குளித்த தொழிலாளியை இழுத்துச் சென்ற முதலை
x
ஆற்றுக்குள் இருந்த முதலை ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயமணியை கடித்து, இழுத்துச் சென்றது. இதையடுத்து, அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கத்தியபடியே முதலையை விரட்டியுள்ளனர். எனினும் ஜெயமணியை முதலை இழுத்துச் சென்று விட்டது. இதையடுத்து, படகில் சென்று 3 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் அவரை மீட்க முடியவில்லை. சிதம்பரம்  வருவாய் துறையினர் அண்ணாமலைநகர் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இரவு நேரமாகி விட்டதால், தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. காலையில் மீண்டும் ஜெயமணியை தேடி முடிவு செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்