மலேசியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி : கடன் வாங்கி சென்று விளையாடிய வீரர் தங்கம் வென்றார்
மலேசியாவில் கைப்பந்து போட்டியில், தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர், நிதி உதவி கோரி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணியின் சார்பாக 12 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்கம் வென்றனர். இதில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த செல்வராஜ் என்ற மாற்றுத்தினாளி, 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி சென்றுள்ளார். சேலம் மாவட்டம் சூரபள்ளி கிராமத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த இவர், தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு தனக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story