திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் : இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
x
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சேகர் என்பவரும் மனு தாக்கல் செய்தார். இதுவரை திருப்பரங்குன்றம் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் சரவணன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் : மாற்றுத்திறனாளி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் மக்கள் புரட்சி கட்சியின் சார்பில் போட்டியிடும் கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி உதயசெல்வம் என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இதுவரை இருவர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : சமூக நீதி கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்



சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சமூக நீதி கட்சி சார்பில் போட்டியிடும்  கணேசன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வரும் மே  மாதம் 19 ஆம் தேதி சூலூர் உள்பட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

Next Story

மேலும் செய்திகள்