ரூ.50,000 லஞ்சமாக பெற்ற குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்
ஐம்பது ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஐம்பது ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், இடமாற்றம் செய்யப்பட்டார். மாதவரத்தை சேர்ந்த சரவணன் என்பவர், நிலத்தகராறு குறித்து புகார் அளிக்க காவல்நிலையம் சென்ற போது, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ், 50 ஆயிரம் பணம் மற்றும் ஐ-போனை லஞ்சமாக பெற்றார். இது குறித்து தகவலறிந்த, கூடுதல் காவல் ஆணையர் தினகரன், பணத்தையும் ஐபோனையும் திருப்பி தருமாறு கூறினார். ஆனால், திருப்பி தராததால், சுரேசை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, தினகரன் உத்தரவிட்டார்.
Next Story