மேட்டூர் : கனமழை - வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
சேலம் மாவட்டம், மேட்டூரில் நேற்று இரவு பெய்த கன மழையால், இந்திரா நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சேலம் மாவட்டம், மேட்டூரில் நேற்று இரவு பெய்த கன மழையால், இந்திரா நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாய்க்காலை நகராட்சி நிர்வாகம் சரிவர தூர்வாராததே, இப்பிரச்சினைக்கு காரணம் என்று குற்றம்சாட்டும் பொதுமக்கள், உடனடியாக கழிவுநீர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story